உலகிலேயே முதல் முறையாக, இத்தாலி நாட்டில் சாட் ஜிபிடி தொழில்நுட்பத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தனி உரிமை மற்றும் பிரைவசி சார்ந்த பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
பயனர்களின் தனிப்பட்ட தரவுகளை, முறையற்ற முறையில் சேகரித்ததாக சாட் ஜிபிடியின் மீது இத்தாலி குற்றம் சாட்டியுள்ளது. இந்த தொழில்நுட்பத்தை தயாரித்த ஓபன் ஏஐ நிறுவனத்தின் மீது, இந்த குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. “சாட் ஜிபிடியால் அதிக அளவு சாதகங்கள் உள்ள போதும், அதே அளவில் பாதகங்களும் உள்ளது. இந்த தொழில்நுட்பத்தால் சிறார்கள் பாதிக்கப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே, ஓபன் ஏஐ நிறுவனம் உரிய விளக்கம் தரும் பட்சத்தில், இந்த தற்காலிக தடை நீக்கப்படும்” என்று இத்தாலியின் டேட்டா பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், இதே போன்ற காரணங்களுக்காக, ரஷ்யா, சீனா மற்றும் வடகொரியா நாடுகளிலும் சாட் ஜிபிடி தொழில்நுட்பம் தடை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.