ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வரும் 26 ஆம் தேதி காலவரையற்ற போராட்டம் நடத்தப்படுவதாக
அறிவித்து உள்ளனர்.
ஜாக்டோ ஜியோ நிறுவனம் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல் படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி 26 ஆம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசுடன் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் உடன்பாடு ஏற்படாத நிலையில் திட்டமிட்டபடி போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் நாளை அடையாள வேலை நிறுத்தம் நடைபெறும் எனவும் ஜாக்டோ ஜியோ தெரிவித்திருந்தது. இந்நிலையில் நாளை நடக்கவிருந்த ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் மு க ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.