பி.சி.சிஐ செயலாளர் ஜெய் ஷா ஐ.சி.சி. தலைவராக பொறுப்பேற்றார்.
பி.சி.சிஐ பொதுச் செயலாளரும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் மகனுமான ஜெய் ஷா, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2019 அக்டோபர் முதல் பிசிசிஐ கெளரவ செயலாளராகவும், 2021 ஜனவரி முதல் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும் பணியாற்றிய ஜெய் ஷா, தற்போது ஐ.சி.சி. தலைவராக பொறுப்பேற்றார்.ஜெய் ஷா, 35 வயதிற்கு உட்பட்ட இளம் நபராக ஐ.சி.சி. தலைவராக பொறுப்பேற்றுள்ளதின் மூலம் மிக இளம் தலைவராக ஆட்சியாற்றும் சாதனையை பெற்றுள்ளார்.