ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இருக்கும் ஜெயிஷாவின் பதவி காலம் மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக தற்போது ஜெய்ஷா பதவி வகித்து வருகிறார். பொதுவாக ஏசிசி தலைவரின் பதவி காலம் இரண்டு ஆண்டுகள். அதில் ஜெயிஷா தற்போது இரண்டாவது ஆண்டில் உள்ளார். இந்நிலையில் இந்தோனேசியாவின் தலைநகரில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஜெயிஷாவின் பதவிக்காலம் மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்பட இருப்பதாக ஒரு மனுதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. இவர் வங்காளதேச கிரிக்கெட் வாரிய தலைவர் நஸ்மல்ஹாசனுக்கு பிறகு 2021ல் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். மேலும் ஜெய்ஷாவின் தலைமையில் 2022 ஆம் ஆண்டு ஏசிசி ஆசிய கோப்பை டி20 போட்டியாகவும், 2023 - இல் ஒருநாள் போட்டியாகவும் வெற்றிகரமாக ஏற்பாடு செய்தது குறிப்பிடத்தக்கது.