சட்டப்படிதான் கைவிலங்கு போடப்பட்டது - அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்

February 6, 2025

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களின் கை, கால்களில் விலங்கு போடப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இது வழக்கமான நடைமுறைதான் என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மாநிலங்களவையில் விளக்கம் அளித்துள்ளார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இதுகுறித்து முழக்கம் எழுப்பியதால், கூட்டம் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், ஜெய்சங்கர் விளக்கம் அளிக்க, "சட்டவிரோத குடியேறிகளை திருப்பி அனுப்புவது அனைத்துநாடுகளும் மேற்கொள்ளும் நடைமுறையாகும். 2012 முதல் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் நபர்களுக்கு விலங்கு […]

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களின் கை, கால்களில் விலங்கு போடப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இது வழக்கமான நடைமுறைதான் என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மாநிலங்களவையில் விளக்கம் அளித்துள்ளார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இதுகுறித்து முழக்கம் எழுப்பியதால், கூட்டம் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், ஜெய்சங்கர் விளக்கம் அளிக்க, "சட்டவிரோத குடியேறிகளை திருப்பி அனுப்புவது அனைத்துநாடுகளும் மேற்கொள்ளும் நடைமுறையாகும். 2012 முதல் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் நபர்களுக்கு விலங்கு போடும் நடைமுறை தொடர்கிறது, ஆனால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இது அமல்படுத்தப்படாது" என்று கூறினார்.

இந்தியர்கள் தவறாக நடத்தப்படாமல் இருக்க அமெரிக்காவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், நாடு கடத்தப்பட்டவர்கள் அளிக்கும் தகவலின்படி, அவர்களை அனுப்பிய முகவர்கள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். கை, கால்களில் விலங்கு போடப்பட்டதால் இந்தியர்கள் கழிப்பறை செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும், அவர்கள் தங்கள் வேதனையை வெளிப்படுத்தியுள்ளதாகவும் கூறினார். இதுபோன்ற நாடு கடத்தல் சம்பவங்கள் 2009, 2010 ஆண்டுகளிலும் நடந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu