தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டுக்காக திருச்சியின் சூரியூர் பகுதியில் ரூ.3 கோடி மதிப்பில் 5 ஏக்கர் பரப்பளவில் அரங்கம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இன்று, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதில் அலுவலகம், முக்கிய விருந்தினர் அறைகள், வீரர்கள் மாற்றும் கூடம், 810 பேருக்கான பார்வையாளர் மைதானம், உடற்பயிற்சி மற்றும் உள் விளையாட்டு அரங்கம் ஆகியவை உருவாக உள்ளன.
நிகழ்ச்சிக்குப் பிறகு பேசிய உதயநிதி ஸ்டாலின், மத்திய அரசு தமிழகத்திற்கு நிதி ஒதுக்கவில்லை என்றும், இதுகுறித்து முதலமைச்சருடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். மத்திய அரசு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.