ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பயங்கரவாதிகள் உயிரிழப்பு.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பயங்கரவாதிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. குல்காம் மாவட்டம் பெஹிபாக் பகுதியில் உள்ள காடரில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். இந்தப் பயணத்தில், பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். இது என்கவுண்டராக மாறி, பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்தனர். இந்த சம்பவத்தில் 5 பயங்கரவாதிகள் உயிரிழந்ததாகவும், 2 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.














