ஜப்பானில் பறவை காய்ச்சல் பரவுவதையடுத்து 14 ஆயிரம் பறவைகள் அழிக்கப்பட்டன.
தெற்கு ஜப்பான் பகுதியான ககோஷிமாவில் உள்ள மினாமிசாற்றுமா நகரில் ஒரு கோழி பண்ணையில் பறவை காய்ச்சல் பரவுவது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தெற்கு ஜப்பான் முழுவதிலும் சுமார் 14,000 பறவைகள் அழிக்கப்பட்டது. இந்த நோய் தொற்று பரவாமல் தடுக்க பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தூரம் வரை இருந்த 15 பண்ணைகளில் 3,63,000 கோழிகள் பிற இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட பறவைகளை அடக்கம் செய்து, பண்ணைகளை சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜப்பானில் அக்டோபர் மாதத்தில் பறவை காய்ச்சல் ஏற்படும். கடந்த ஆண்டு அங்கு 47 மாகாணங்களில் கிருமி தொற்று ஏற்பட்டு 17.71 மில்லியன் பறவைகள் அழிக்கப்பட்டன.