கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி, சர்வதேச அளவிலான எதிர்ப்புகளை மீறி, புகுஷிமா அணு மின் நிலைய கழிவுகள் ஜப்பான் கடலில் கலக்கப்பட்டன. தற்போது, இரண்டாவது முறையாக, இன்று காலை முதல் அணுக்கழிவுகள் கடலில் கலக்கப்பட்டு வருகின்றன.அணு கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்ட பின்னரே கடலில் கலக்கப்படுவதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. அதன்படி, ஒரு டன் சுத்திகரிக்கப்பட்ட நீர், 1200 டன் உப்பு நீருடன் சேர்த்து கலக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கழிவில் உள்ள ட்ரைட்டியம் அளவு - ஒரு லிட்டருக்கு 63 முதல் 87 பெக்ரெல் அளவில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இது ஜப்பானின் சுற்றுச்சூழல் கழிவு மாசு அளவைவிட மிகவும் குறைவானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.