ஜப்பான் நாடாளுமன்றத்தின் கீழவையை கலைக்க பிரதமர் ஷிகெரு இஷிபா நேற்று உத்தரவிட்டார்.
புதிய நாடாளுமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இந்த மாதம் 27-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஃபுமியோ கிஷிடோ பதவி விலகியதையடுத்து, லிபரல் ஜனநாயகக் கட்சியின் புதிய தலைவராக இஷிபா கடந்த மாதம் தேர்வு செய்யப்பட்டார். முன்னதாக, மூன்று எம்.பி.க்கள் ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக பதவி விலகியதால், அந்தக் கட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தது. எனவே, புதிதாக தேர்தல் நடத்தி பெரும்பான்மையை மீண்டும் பெறுவதற்காக இஷிபா நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைக்க முடிவு செய்துள்ளார்.