ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் பணிபுரியும் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களை சம்பளம் இல்லா விடுப்பில் செல்ல நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. இல்லையென்றால், அவர்களுக்கு 50% சம்பளம் மறுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. வரும் டிசம்பர் 1 ம் தேதி முதல் இந்த கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மிகப்பெரிய நெருக்கடியில் உள்ளது. கிட்டத்தட்ட திவால் ஆகும் சூழலில் உள்ள இந்த நிறுவனத்தின் சார்பாக, கடந்த ஏப்ரல் 2019 முதல் எந்த விமானமும் இயக்கப்படவில்லை. இந்நிலையில், பணப்புழக்கங்களை நிர்வகிப்பதற்கான குறுகிய கால முடிவுகளை எடுக்க நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன் பகுதியாக இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.