அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கூடிய செந்தில் பாலாஜி மனுவிற்கு 28 ஆம் தேதி தீர்ப்பு

March 23, 2024

தமிழகத்தில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு புழல் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த வருடம் தமிழக அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வழக்கிலிருந்து தன்னை விடுவிக்குமாறு மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அதில் செந்தில் பாலாஜி தரப்பில் […]

தமிழகத்தில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு புழல் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த வருடம் தமிழக அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வழக்கிலிருந்து தன்னை விடுவிக்குமாறு மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அதில் செந்தில் பாலாஜி தரப்பில் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என வாதாடப்பட்டது. அதனை எதிர்த்து 2015,2016,2017 ஆம் ஆண்டுகளில் செந்தில் பாலாஜி வங்கி கணக்கில் அதிக அளவில் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு எதிரான ஆதாரங்கள் உள்ளதாகவும் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் அமலாக்கத்துறை சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. அதனை அடுத்து முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி இந்த வழக்கின் தீர்ப்பு 28ஆம் தேதி வழங்கப்படும் என அறிவித்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu