அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை இன்று பேங்காக்கில் சந்தித்தார். ஆசிய பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு மாநாட்டின் பகுதியாக இந்த சந்திப்பு நிகழ்ந்தது. இந்த சந்திப்பின் மூலம், இரு நாடுகளுக்கு இடையிலான வேற்றுமை மற்றும் தவறான புரிதல் களையப்படும் என்று நம்பப்படுகிறது.
இது தொடர்பாக, சீன வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அண்மையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரின் சந்திப்பு அமெரிக்கா-சீனா உறவை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றுள்ளது என கூறப்பட்டுள்ளது. எனவே, இன்றைய சந்திப்பின் மூலம், இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மேம்படும் என்று நம்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த சந்திப்பின் போது, கொரிய தீபகற்பத்தில் உள்ள பதற்ற சூழ்நிலை, உக்ரைன்- ரஷ்யா போர் மற்றும் சீனா- தைவான் இடையிலான மனித உரிமைகள் பிரச்சனை போன்றவை விவாதிக்கப்பட்டதாக கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.