கர்நாடகாவில் உள்ள அனைத்து வங்கிகளிலும் இனி கன்னட மொழியில் தான் சேவைகள் வழங்க வேண்டும் என கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
உள்ளூர் மக்களுக்கு புரியும் வகையில் கன்னட மொழியில் தான் இனி வங்கி சேவைகள் வழங்க வேண்டும் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. பல கிராமங்களில் அதிகாரிகள் இந்தியில் பேசுவதால் மக்களுக்கு பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதற்கு இவை தீர்வாக இருக்கும் என அரசு தெரிவித்துள்ளது. மேலும் வங்கிகளில் இந்தி மொழியை தாய்மொழியாக கொண்ட ஊழியர்கள் அதிகம் இருப்பதால் மொழியை புரிந்து கொள்வதில் மக்களுக்கு தகராறு ஏற்படுகிறது. மக்கள் கோரிக்கை வைக்கப்பட்டதை தொடர்ந்து வங்கிகளில் கட்டாய கன்னட மொழிக்கான அரசாணையை கொண்டு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.