கேரளா வளைகுடா நாடுகளுக்கு இடையே கப்பல் சேவை

March 27, 2024

கேரளா வளைகுடா நாட்களுக்கு நாடுகளுக்கு இடையே விரைவில் கப்பல் சேவை தொடங்கப்பட உள்ளது. கேரளாவைச் சேர்ந்த மக்கள் வளைகுடா நாடுகளில் அதிக அளவில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் சொந்த ஊருக்கு வருவதற்கு விமான சேவையை பயன்படுத்தி வருகின்றன. இதில் திடீர் திடீரென விமான கட்டணங்கள் உயர்த்தப்படுவதால் அவர்களுக்கு கடும் சிரமம் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு வளைகுடா நாடுகளில் இருந்து கேரளாவிற்கு கப்பல் சேவை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனை அடுத்து கேரள வாரியம் […]

கேரளா வளைகுடா நாட்களுக்கு நாடுகளுக்கு இடையே விரைவில் கப்பல் சேவை தொடங்கப்பட உள்ளது.

கேரளாவைச் சேர்ந்த மக்கள் வளைகுடா நாடுகளில் அதிக அளவில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் சொந்த ஊருக்கு வருவதற்கு விமான சேவையை பயன்படுத்தி வருகின்றன. இதில் திடீர் திடீரென விமான கட்டணங்கள் உயர்த்தப்படுவதால் அவர்களுக்கு கடும் சிரமம் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு வளைகுடா நாடுகளில் இருந்து கேரளாவிற்கு கப்பல் சேவை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனை அடுத்து கேரள வாரியம் விழிஞ்சம், கொல்லம்,பேப்பூர் மற்றும் அழிக்கால் துறைமுகங்களில் இருந்து கப்பல் சேவைகளை இயக்க முடிவு செய்தது. இது தொடர்பாக விருப்பமுள்ள நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டிருந்தது. அதில் தற்போது நான்கு நிறுவனங்கள் கப்பல் சேவைகளை தொடங்க விருப்பம் உள்ளதாக தெரிவித்துள்ளன.இது தொடர்பான முதல் கட்ட விவாதம் நாளை கொச்சியில் நடைபெற உள்ளது. இந்த கப்பல் சேவை தொடங்கப்பட்டால் பயண நேரம் அதிகரித்தாலும் அதிக சரக்குகளை கொண்டு செல்ல முடியும் எனவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu