திருவனந்தபுரம் -கண்ணுார் இடையே கேரளாவின் 'வந்தே பாரத்' ரயில் தொடக்கம்

April 18, 2023

கேரளாவில் முதல் 'வந்தே பாரத்' ரயில் சேவை திருவனந்தபுரம் - கண்ணுார் இடையே துவங்கப்பட உள்ளது. நாடு முழுவதும் 14 வழித்தடங்களில் 'வந்தே பாரத்' ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 15வது வந்தே பாரத் ரயில் கேரளாவில் திருவனந்தபுரம் - கண்ணுார் இடையே நேற்று வெற்றிகரமாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்த ரயில் சேவையை வரும் 25 ஆம் தேதி பிரதமர் மோடி துவக்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு நிலையங்களுக்கும் இடையிலான 501 கி.மீ., துாரத்தை இந்த […]

கேரளாவில் முதல் 'வந்தே பாரத்' ரயில் சேவை திருவனந்தபுரம் - கண்ணுார் இடையே துவங்கப்பட உள்ளது.

நாடு முழுவதும் 14 வழித்தடங்களில் 'வந்தே பாரத்' ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 15வது வந்தே பாரத் ரயில் கேரளாவில் திருவனந்தபுரம் - கண்ணுார் இடையே நேற்று வெற்றிகரமாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்த ரயில் சேவையை வரும் 25 ஆம் தேதி பிரதமர் மோடி துவக்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு நிலையங்களுக்கும் இடையிலான 501 கி.மீ., துாரத்தை இந்த ரயில் ஏழரை மணி நேரங்களில் கடக்கும் என கூறப்படுகிறது. கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம் டவுன், திருச்சூர், கோழிக்கோடு ஆகிய இடங்களில் நின்று செல்லும் என தகவல் வெளியாகி உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu