உலக செஸ் சாம்பியன் குகேஷ் மற்றும் 3 வீரர்களுக்கு 'கேல் ரத்னா' விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு விளையாட்டு வீரர்களுக்கான கேல் ரத்னா விருதுகளை அறிவித்துள்ளது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த உலக செஸ் சாம்பியன் குகேஷ்க்கு கேல் ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. பாரீஸ் ஒலிம்பிக் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் 2 பதக்கங்களை வென்ற மனு பாக்கர், இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் மற்றும் பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற பாரா தடகள வீரர் பிரவீன்குமாரும் இந்த விருது பெற்றுள்ளனர். இந்த நான்கு வீரர்களுக்கு வரும் 17ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்க உள்ளார்.














