வட கொரியாவில் அதிபர் கிம் ஜாங் போருக்கு அழைப்பு விடுத்துள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.
தென்கொரியா வருகிற 21 மற்றும் 24-ந்தேதிகளுக்கிடையில் அமெரிக்காவுடன் இணைந்து ராணுவ பயிற்சியில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள்ளது. இதை வடகொரியாவுக்கான அச்சுறுத்தலாக கிம் ஜாங் உன் கருதுகிறார். இந்நிலையில், கிம் ஜாங் ராணுவ தலைமை ஜெனரலை நீக்கியுள்ளார். அவருக்குப் பதிலாக ரி யோங் கில் என்பவரை ஜெனரலாக நியமித்துள்ளார். இவர் பாதுகாப்பு மந்திரியும் கூட.
அதனோடு போருக்கு தயாராகும்படி அதிகாரிகளை கேட்டுக்கொண்டும் ஆயுத தயாரிப்பை அதரிக்கவும் வலியுறுத்தியுள்ளார். அவர் கடந்த வாரம் ஆயுத தொழிற்சாலைக்கு சென்று ஏவுகணை, பீரங்கி போன்ற ஆயுதங்களை அதிக அளவில் உற்பத்தி செய்ய உத்தரவிட்டார்.