போலீஸ் கைது செய்ய வருவதை அறிந்து சுவர் ஏறி குதித்து இம்ரான் கான் தப்பி ஓட்டம்

March 7, 2023

போலீசார் கைது செய்ய வரும் தகவல் கிடைத்ததும் இம்ரான் கான், சுவர் ஏறி குதித்து பக்கத்து வீடு வழியாக தப்பி ஓடியதாக பாகிஸ்தான் உள்துறை மந்திரி ரானா சனாவுல்லா தெரிவித்துள்ளார். இம்ரான்கான் வெளிநாட்டு தலைவர்களிடம் இருந்து பெற்ற விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை அரசு கருவூலத்தில் ஒப்படைக்காமல் முறைகேடாக விற்று சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கு விசாரணையில் இம்ரான்கானை கைது செய்ய ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்டை பிறப்பித்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு […]

போலீசார் கைது செய்ய வரும் தகவல் கிடைத்ததும் இம்ரான் கான், சுவர் ஏறி குதித்து பக்கத்து வீடு வழியாக தப்பி ஓடியதாக பாகிஸ்தான் உள்துறை மந்திரி ரானா சனாவுல்லா தெரிவித்துள்ளார்.

இம்ரான்கான் வெளிநாட்டு தலைவர்களிடம் இருந்து பெற்ற விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை அரசு கருவூலத்தில் ஒப்படைக்காமல் முறைகேடாக விற்று சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கு விசாரணையில் இம்ரான்கானை கைது செய்ய ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்டை பிறப்பித்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு லாகூர் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த நிலையில் இஸ்லாமாபாத் போலீசார், இம்ரான்கானை கைது செய்ய லாகூரில் உள்ள அவரது வீட்டுக்கு நேற்று முன்தினம் மதியம் சென்றனர். ஆனால் அவரது வீட்டின் முன்பு திரண்டிருந்த நூற்றுக்கணக்கான பிடிஐ கட்சி தொண்டர்கள் போலீசாரை உள்ளே அனுமதிக்க மறுத்தனர். பின்னர் போலீசார் அதிரடியாக வீட்டுக்குள் நுழைந்தனர். ஆனால் அங்கு இம்ரான்கான் இல்லை. அதை தொடர்ந்து போலீசார் அங்கிருந்து சென்றனர். அடுத்த சில மணி நேரங்களில் இம்ரான்கான் லாகூரில் உள்ள வீட்டில் இருந்தபடியே தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றினார். இது போலீசாரை அதிர்ச்சியடைய செய்தது. அதனை தொடர்ந்து போலீசார் மீண்டும் லாகூரில் உள்ள இம்ரான்கான் வீட்டுக்கு சென்றனர்.

இதனிடையே, போலீசார் கைது செய்ய வரும் தகவல் கிடைத்ததும் இம்ரான் கான், சுவர் ஏறி குதித்து பக்கத்து வீடு வழியாக தப்பி ஓடியதாக பாகிஸ்தான் உள்துறை மந்திரி ரானா சனாவுல்லா தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu