கேரள மாநிலத்தில் மாதிரி தேர்வு நடப்பதற்கு முன்னதாகவே மாணவ மாணவிகளின் வாட்ஸ் ஆப்- இல் தேர்வுக்கான வினாத்தாள் பரவியுள்ளது.
கேரளா மாநிலத்தில் பொதுத் தேர்வுக்கு 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் தயாராகி வரும் நிலையில் அவர்களுக்கான மாதிரி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேர்வுக்கு முன்னதாக ஆங்கில தேர்வுக்கான வினாத்தாள் பரவியதாக தெரியவந்துள்ளது. பொதுவாக தேர்வுகளுக்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே பள்ளி அலுவலகத்திற்கு வினாத்தாள்கள் அனுப்பி வைத்து லாக்கரில் வைக்கப்படும். அவை சற்று நேரத்திற்கு முன்பு தான் எடுக்கப்படும். அப்படி பாதுகாக்கப்பட்ட வினாத்தாள்கள் பரவியது எப்படி என்பதற்கு எந்த தகவலும் தெரியவில்லை. தேர்வு நடப்பதற்கு முன்பாக வினாத்தாள் வெளியாகியது குறித்து எந்த புகார்களும் வரவில்லை. இதனால் விசாரணை ஏதும் நடக்கவில்லை எனவும் தெரியவந்துள்ளது.