குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து 2 ஆண்டுகளில் சிறிய ராக்கெட்கள் ஏவப்படும் - இஸ்ரோ

February 29, 2024

இந்தியாவின் 2வது ராக்கெட் ஏவுதளம் தமிழ்நாட்டில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் அமைக்கப்படுகிறது. நேற்று, பிரதமர் நரேந்திர மோடி, இதற்கான அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், அடுத்த 2 ஆண்டுகளில் குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவு தளத்திலிருந்து சிறிய வகை செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்படும் என கூறியுள்ளார். பூமத்திய ரேகைக்கு மிக அருகில் குலசேகரப்பட்டினம் அமைந்துள்ளது. பொதுவாக, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் ராக்கெட்கள் முதலில் கிழக்கு திசையை நோக்கி நகர்த்தப்பட்டு, அதன் பின் […]

இந்தியாவின் 2வது ராக்கெட் ஏவுதளம் தமிழ்நாட்டில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் அமைக்கப்படுகிறது. நேற்று, பிரதமர் நரேந்திர மோடி, இதற்கான அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், அடுத்த 2 ஆண்டுகளில் குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவு தளத்திலிருந்து சிறிய வகை செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்படும் என கூறியுள்ளார்.

பூமத்திய ரேகைக்கு மிக அருகில் குலசேகரப்பட்டினம் அமைந்துள்ளது. பொதுவாக, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் ராக்கெட்கள் முதலில் கிழக்கு திசையை நோக்கி நகர்த்தப்பட்டு, அதன் பின் தெற்கு நோக்கி செலுத்தப்படும். இலங்கைக்கு ஆபத்து நேராமல் இருக்க இவ்வாறு பின்பற்றப்படும். ஆனால், குலசேகரப்பட்டினத்தில் அத்தகைய செயல்பாடுகள் தேவை இல்லை. நேரடியாக தெற்கு நோக்கி விரைவாக ராக்கெட்களை செலுத்த முடியும். ஆண்டுக்கு 24 செயற்கைக்கோள்கள் செலுத்தும் வகையில் குலசேகரப்பட்டினத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அடுத்த 2 ஆண்டுகளுக்குள் இதன் கட்டுமானங்கள் முழுமை பெற்று, செயல்பாடுகள் தொடங்கும். - இவ்வாறு சோம்நாத் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu