குவைத் நாட்டில் தங்கியிருந்து வேலை செய்யும் வெளிநாட்டினருக்கு குடியிருப்பு விசா நடைமுறைகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளன. இதற்கான செயல்பாடுகளை குவைத்து நாட்டு அரசு தொடங்கியுள்ளது.
குடியிருப்பு விசா குறித்த புதிய சட்ட திருத்த மசோதா குவைத் நாடாளுமன்றத்தில் அடுத்த மாதம் நிறைவேற்றப்படும் எனக் கூறப்படுகிறது. புதிய சட்ட திருத்தத்தின்படி, குவைத் நாட்டில் புதிதாக குடியிருப்பு அனுமதி பெறுவது, ஏற்கனவே குடியிருக்கும் வெளிநாட்டினவர்கள் தங்கள் விசாக்களை புதுப்பிப்பது, புதிதாக நுழைவு விசா பெறுவது போன்றவற்றுக்கு கட்டணங்கள் வசூலிக்கப்பட உள்ளன. மேலும், வெளிநாட்டினர்கள் முதல் 3 மாதங்களுக்கு குவைத் நாட்டில் தங்கிக் கொள்ளலாம். அதன் பிறகு ஓராண்டுக்கு விசாவை நீட்டிக்க வேண்டும். இந்த நடைமுறையை 5 ஆண்டுகள் வரையில் பின்பற்றி கொள்ளலாம் என கூறப்படுகிறது. இது தவிர, பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.