தமிழ்நாட்டைச் சேர்ந்த கரூர் வைஸ்யா வங்கி, தனது நான்காம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், வங்கியின் நிகர லாபம் 338 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில், 213 கோடியாக இருந்தது. எனவே, கிட்டத்தட்ட 58.7% லாப உயர்வு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதே வேளையில், கடந்த காலாண்டில், வங்கிக்கு வட்டி மூலம் கிடைக்கும் வருவாய் 710 கோடியில் இருந்து 25.8% உயர்ந்து, 893 கோடி ஆக உயர்ந்துள்ளது. மேலும், வங்கியின் இதர வருவாய் 95.6% வளர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 205 கோடியிலிருந்து 401 கோடியாக இதர வருவாய் உயர்ந்துள்ளது. மேலும், ஒட்டுமொத்தமாக, 2022-ம் நிதி ஆண்டில் 673 கோடி நிகர லாபம் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், 2023 ஆம் நிதி ஆண்டில், நிகர லாபம் 1106 கோடியாக உயர்ந்துள்ளது. இது 64.3% உயர்வாகும்.