புதுக்கோட்டையில் விபத்தில் உயிரிழந்த பெண் காவலர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், மண்டையூர் காவல் நிலையத்தில் பெண் காவலராக பணிபுரிந்து வந்த விமலா இன்று, புதுக்கோட்டை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த போது, பின்புறமாக வந்த 4 சக்கர வாகனத்துடன் மோதிக் காண்ட்டவர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.. விமலாவை இழந்த அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்குவதற்கு உத்தரவிட்டுள்ளார்.














