கேரளா அரசு ஓணம் கொண்டாட்டத்தை ரத்து செய்து அறிவித்துள்ளது.
கேரளாவின் வயநாடு மலைக்கிராமங்களில் கடந்த மாதம் 30-ஆம் தேதி அதிகாலை கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. கனமழையால் ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதுவரை 231 உடல்களும், 206 உடல் பாகங்களும் மீட்கப்பட்டுள்ளன, 300-க்கும் மேற்பட்டோர் மாயமானவர்கள். நிலச்சரிவால் வீடுகளை இழந்த ஆயிரக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, கேரளா அரசாங்கம் ஓணம் வார கொண்டாட்டத்தை ரத்து செய்துள்ளது. வயநாடு மக்களுக்கு உறுதுணையாக இருப்போம் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.