உலகிலேயே மிகப்பெரிய அம்பேத்கர் சிலையை ஆந்திரா முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர மாநிலத்தில் திறந்து வைத்தார்.
ஆந்திராவின் விஜயவாடாவில் 125 அடி உயர டாக்டர் அம்பேத்கர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இது 81 அடி உயரம் கொண்ட பீடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளதால் மொத்த உயரம் 206 அடியாக உள்ளது. இந்த சிலை அமைக்கப்பட்டுள்ள இடத்திற்கு ஸ்மிருதிவனம் என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இங்கு பூங்காக்கள், மைதானத்தில் மினி தியேட்டர், அருங்காட்சியகம், நீரூற்று, வாகன நிறுத்தும் இடம், உணவு விடுதி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இந்த மிகப்பெரிய அம்பேத்கர் சிலையை ஆந்திர மாநில முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி நேற்று திறந்து வைத்துள்ளார். மேலும் இந்தச் சிலை சமத்துவம் சமூக நீதியின் அடையாளம் என்பதால் சமூக நீதிக்கான சிலை என தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.