டிஜிட்டல் பண பரிவர்த்தனை கூட்டுறவு வங்கிகளில் தொடங்கப்பட்டுள்ளது.
மாநில தலைமை மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் 'டிஜிட்டல்' முறையில் பண பரிவர்த்தனை மேற்கொள்ளும் ஐ.எம்.பி.எஸ்., எனப்படும் உடனடி பணம் அனுப்பும் வசதி துவக்கப்பட்டுள்ளது. நாட்டில் தமிழகத்தில் தான் கூட்டுறவு வங்கியில் இந்த வசதி முதல்முறையாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாநில தலைமை கூட்டுறவு வங்கிக்கு சென்னையில் 54 கிளைகளும்; 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு, தமிழகம் முழுதும் 922 கிளைகளும் உள்ளன. அந்த வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு இணையதள வங்கி, மொபைல் வங்கி சேவை வழங்குகின்றன.
மேலும் யு.பி.ஐ., வாயிலாக 'கூகுள் பே, பேடிஎம், பீம்' செயலி வாயிலாக டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்ள ஐ.எம்.பி.எஸ்., வசதி இருக்க வேண்டும். தற்போது கூட்டுறவு வங்கிகளில் அந்த வசதி ஏற்படுத்தப்பட்டதை அடுத்து இரு வாரங்களில் யு.பி.ஐ., வாயிலாக கூகுள் பே உள்ளிட்ட டிஜிட்டல் முறை பண பரிவர்த்தனை வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.