விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஒற்றை சாளர இணையதளத்தை உருவாக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.
விவசாயிகளையும் அரசையும் இணைக்கும் ஒற்றை சாளர இணையதளத்தை உருவாக்கி அரசு புதிய முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்காக GRAINS என்றும் இயங்குதளத்தை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு ஒரே தளத்தில் எல்லா பயன்களும் கிடைக்கும். இதன் மூலம் பயிர்க்கடன், நெல், கரும்புக்கான ஊக்கத்தொகை, இயற்கைப் பேரிடர் நிவாரணம் நலத்திட்ட உதவிகள், வேளாண்மை சார்ந்த 13க்கும் மேற்பட்ட துறைகளின் பல்வேறு திட்டப் பலன்கள் அனைத்தையும் விவசாயிகள் எளிதாகப் பெறும் வகையில் இந்த இணையதளம் வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்படும்.
இது விவசாயிகளுக்கும் அரசின் பல துறைகளுக்கும் பெரும் உதவியாக இருக்கும். வேளாண் திட்டப் பயன்களை பெற தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டியுள்ளது. இந்த சிரமத்தை தவிர்க்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.