வங்கதேசத்தில் அமைந்த இடைக்கால அரசின் தலைமை பொறுப்பை முகமது யூனஸ் ஏற்றுக்கொண்டார்.
வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம் கலவரமாக மாறியதையடுத்து அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா ஆட்சியிலிருந்து இறங்கினார். அதையடுத்து அங்கு இடைக்கால அரசு அமையும் என்று வங்கதேச ராணுவ தளபதி கூறி இருந்தார். இந்த இடைக்கால அரசிற்கு நோபல் பரிசு வென்ற முகமது யூனிஸ் தலைமை ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அவர் நேற்று இரவு தலைமை பொறுப்பை ஏற்றுக் கொண்டார். முகமது யூனிஸ் தலைமையில் 17 பேர் கொண்ட ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த இடைக்கால அரசில் இந்துக்கள் கொண்ட ஆலோசனைக் குழு, மாணவர் அமைப்பினர் மற்றும் பெண்கள் பதவி ஏற்றனர். வங்கதேச வங்கியின் முன்னாள் கவர்னர், முன்னாள் வெளியேறுத்துறை செயலர் போன்றோரும் பதவி ஏற்று கொண்டனர்.மனித உரிமை ஆர்வலர் ரஹ்மான் மற்றும் சுதந்திர போராட்ட வீரர் கரோக்கி ஆசான் ஆகியோரும் பதவியேற்றனர்.