80 லட்சம் கருத்துக்களை பெற்ற பொது சிவில் சட்டம்- 22 ஆவது சட்ட ஆணையம் தகவல்

22 ஆவது சட்ட ஆணையம் தெரிவித்துள்ளதன் படி தனி நபர்கள் மற்றும் அமைப்புகளில் இருந்து பொது சிவில் சட்டம் பற்றிய 80 லட்சம் கருத்துகள் கிடைக்க பெற்றுள்ளது. கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி ஓய்வு பெற்ற நீதிபதி எஸ். ராஜா அஸ்வதி தலைமையிலான 22வது சட்ட ஆணையம் வெளியிடப்பட்டது. இந்த சட்ட ஆணையம் பொது சிவில் சட்டம் பற்றி தனி நபர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளில் இருந்து பல்வேறு கருத்துகளை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட உருவாக்கப்பட்டதாகும். […]

22 ஆவது சட்ட ஆணையம் தெரிவித்துள்ளதன் படி தனி நபர்கள் மற்றும் அமைப்புகளில் இருந்து பொது சிவில் சட்டம் பற்றிய 80 லட்சம் கருத்துகள் கிடைக்க பெற்றுள்ளது.

கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி ஓய்வு பெற்ற நீதிபதி எஸ். ராஜா அஸ்வதி தலைமையிலான 22வது சட்ட ஆணையம் வெளியிடப்பட்டது. இந்த சட்ட ஆணையம் பொது சிவில் சட்டம் பற்றி தனி நபர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளில் இருந்து பல்வேறு கருத்துகளை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட உருவாக்கப்பட்டதாகும். இந்தியாவின் 21வது சட்ட ஆணையம் குறித்த விஷயங்களை ஆய்வு செய்து வந்ததில் ஏராளமான கருத்துக்களை பெற்ற 21 வது சட்ட ஆணையத்தின் காலம் முடிவடைந்தது. இந்நிலையில் 22வது சட்ட ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. பொது சிவில் சட்டம் எனும் கருத்தாக்கத்தின் முக்கியத்துவத்தையும் நீதிமன்ற தீர்ப்புகளை கருத்தில் கொண்டு இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்ய 22 வது சட்ட ஆணையம் முடிவு செய்துள்ளது. இதில் கருத்து தெரிவிக்க விருப்பம் உள்ளவர்கள் தங்கள் கருத்துக்களை 30 நாட்களுக்குள் ஆன்லைன் லிங்கை பயன்படுத்தி தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் சட்ட ஆணையத்தின் உறுப்பினர் செயலர் முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பலாம். மேலும் இந்த சட்ட ஆணையத்தின் கருத்துக்களை தெரிவிப்பதற்கான காலக்கெடுவை இரண்டு வாரங்களுக்கு நீட்டித்து, காலக்கெடு முடிவடைந்த நிலையில் சுமார் 80 லட்சம் தனி நபர்கள் மற்றும் அமைப்புகளிடம் இருந்து கருத்துக்கள் பெற்றுள்ளதாக 22 வது சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu