நிஜ்ஜார் கொலையிலும், அதில் சம்பந்தப்பட்ட குற்றச்செயல்களிலும் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு பங்குள்ளதாக புதிய குற்றச்சாட்டுகளை கனடா முன்வைத்துள்ளது.
இதனால், இந்தியா கோபமடைந்து கனடாவில் உள்ள தனது தூதர்களை திரும்ப பெற தீர்மானித்துள்ளது. மேலும் இந்தியாவில் உள்ள கனடா தூதர்களையும் வெளியேற்றவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த கொலை தொடர்பாக இந்திய தூதரக அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படும் என கனடா தெரிவித்துள்ளது. லாரென்ஸ் பிஷ்னோயுடன் இந்திய அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும், அக்கும்பலின் உதவியுடன் காலிஸ்தான் ஆதரவாளர்களை குறிவைப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. கனடா போலீசாரின் மைக் டுஹேன் மற்றும் பிரிஜிட் கவுவின் பேட்டியில், இந்தியா தெற்காசிய சமூகத்தை குறிப்பாக கனடாவில் உள்ள காலிஸ்தான் பிரிவினைவாதிகளை குறிவைக்கிறது என தெரிவித்தனர். இந்திய அதிகாரிகள் மீது கொலை, மிரட்டல், பணம் பறித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளது.