ஆன்லைன் விளையாட்டுகளுக்கு எதிரான வழக்குகள் - உயர்நீதிமன்றம் உத்தரவு

November 16, 2022

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு எதிரான வழக்குகள் தொடர்பாக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன் விளையாட்டுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்யக்கோரி பல்வேறு ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் அவசர சட்டம் அமலுக்கு வரும் தேதி அறிவிக்கப்படவில்லை. மேலும், அவசர சட்டத்துக்கு பதிலாக சட்டமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டு கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி […]

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு எதிரான வழக்குகள் தொடர்பாக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்யக்கோரி பல்வேறு ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் அவசர சட்டம் அமலுக்கு வரும் தேதி அறிவிக்கப்படவில்லை. மேலும், அவசர சட்டத்துக்கு பதிலாக சட்டமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டு கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என வாதிட்டார்.

சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளித்தால் தான் அவரச சட்டம் காலாவதியாகும் என நிறுவனங்கள் சார்பில் வாதிடப்பட்டது. இதனையடுத்து, அவசர சட்டம் அமலுக்கு வரும் தேதி அறிவிக்கப்படாததால் வழக்கு தொடர்வதற்கான எந்தவித காரணமும் இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட நிறுவனங்கள் சட்டம் அமலுக்கு வரும் தேதி அறிவிக்கப்பட்ட பின் வழக்கு தொடருவதாக கூறி வழக்கை திரும்பப்பெற்று கொண்டனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu