மயோட்டே தீவில் சிண்டோ புயல் காரணமாக 11 பேர் பலியாகினர்.
மயோட்டே தீவை நேற்று சிண்டோ புயல் தாக்கியது. இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள இந்த தீவின் மக்கள் தொகை 3 லட்சத்து 20 ஆயிரம். மடகாஸ்கரின் அருகில் உள்ள மயோட்டே, கனமழையுடன் வீசிய புயலால் பெரும் சேதத்தை சந்தித்தது. பல வீடுகள் சேதமடைந்தன, மின்கம்பங்கள், சாலைகள் மற்றும் கட்டிடங்கள் உட்பட முக்கிய உள்கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டன. இந்த புயலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். புயல் தாக்கிய மயோட்டே தீவிற்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கப்படுவதாக பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது. மீட்புப் பணிகளில் ராணுவம் ஈடுபட்டுள்ளது.