லிபியாவில் டேனி புயல் தாக்கியதில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
தெற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது லிபியா. இங்கு உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், லிபியாவை டேனி புயல் தாக்கியது. மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ளதால் புயலின் தாக்கம் கடுமையாக இருந்தது. அந்நாட்டின் சுசா, பெடா, டெர்னா போன்ற நகரங்களில் புயல் கடும் சேதத்தை விளைவித்தது. இந்த புயல் காரணமாக கனமழை பெய்தது. இதனால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்று செய்தி வெளியாகியுள்ளது. பலரைக் காணவில்லை எனவும் கூறப்படுகிறது. மேலும் ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். தற்போது வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக அரசு தெரிவித்துள்ளது.