இந்திய அளவில் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி தனக்கு சொந்தமான நிலம் மற்றும் சொத்துக்களை விற்று நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. கிட்டத்தட்ட 50043 முதல் 58384 கோடி நிதியை எல் ஐ சி திரட்ட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இது 7 பில்லியன் டாலர்களுக்கு ஈடான தொகை ஆகும்.
இந்திய அளவில் 3வது பெரிய நில உரிமையாளராக எல்ஐசி உள்ளது. இந்த நிலையில், தன்னிடம் உள்ள விலை மதிப்பு மிக்க நிலங்கள் மற்றும் கட்டிடங்களை விற்று நிதி திரட்டும் பணிகளில் எல்ஐசி ஈடுபட உள்ளது. இதற்காக, தனி பிரிவு அமைத்து செயல்பட உள்ளது. டெல்லி, கொல்கத்தா, மும்பை போன்ற நகரங்களில் எல்ஐசிக்கு சொந்தமான சிறப்பு மிக்க கட்டிடங்களை எல்ஐசி விற்க உள்ளதாக கூறப்படுகிறது.