டுவிட்டர் நிறுவனத்தின் புதிய சிஇஓ-ஆக லிண்டா யக்காரினோ பொறுப்பேற்றுள்ளார்.
கடந்த ஆண்டு எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார். மேலும் இந்த தளத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்களை அவர் செய்தார். இந்நிலையில் லிண்டாவை புதிய சிஇஓ என மஸ்க் அறிவித்தார். அதோடு டுவிட்டர் நிறுவனத்தின் நிர்வாக தலைமை மற்றும் சிடிஓ என தனது செயல்பாடு இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் டுவிட்டர் நிறுவனத்தின் புதிய சிஇஓ-ஆக தனது பணியை லிண்டா யக்காரினோ தொடங்கினார். டுவிட்டரின் வணிக செயல்பாடுகளை இவர் கவனிப்பார் என்று கூறப்படுகிறது.
லிண்டா யாக்காரினோ 10 ஆண்டுகளுக்கும் மேலாக என்பிசி யுனிவர்சல் நிறுவனத்தில் பணிபுரிந்தவர். மேலும் அந்நிறுவனத்தின் விளம்பர விற்பனையின் தலைவராகவும் இருந்துள்ளார். டர்னர் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தில் சுமார் 19 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவமும் கொண்டவர்.