மாமல்லபுரத்தில் அர்ஜுனன் தபசு வரலாறை 3டி லேசர் ஒலி- ஒளி காட்சி கூடம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சுற்றுலா தளமான மாமல்லபுரத்திற்கு பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சுற்றுலா வருவார்கள். இதில் அர்ச்சனன் தபசு சிற்பத்தில் உள்ள சிலைகளின் ஆன்மீக வரலாறு, இயற்கை கால்நடைகள் மற்றும் 1300 ஆண்டுகளுக்கு முந்தைய மன்னர் காலத்து சிற்பக் கலைகள் ஆகியவை சிலையாக செதுக்கப்பட்டுள்ளது அதன் கதையை அறிந்து கொள்ள அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனை அடுத்து அர்ஜுனன் தபசு அருகே உள்ள தல சயன பெருமாள் கோவில் இடத்தில் 3டி லேசர் ஒளி ஒலி காட்சி படம் அமைக்க முடிவு செய்துள்ளது. இதற்காக 7736 சதுர அடி இடத்தை தேர்வு செய்துள்ளது. மேலும் இது ஐந்து கோடி ரூபாய் மதிப்பில் ஏற்படுத்தப்பட உள்ளது. இதனை அடுத்து அங்கு விரைவில் அர்ஜுனன் தபசு பற்றியும் அதில் உள்ள சிற்பங்கள் பற்றியும் 3டி லேசர் ஒலி ஒளி காட்சியில் ரசிக்கலாம். இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றன.