கர்நாடகாவில் 4 அரசு அதிகாரிகளின் வீடுகளில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் சோதனை.
கர்நாடகா மாநிலத்தில், காவிரி பாசன கழகத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் பெங்களூரு கலால் துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட 4 அரசு அதிகாரிகள் குறித்து லோக் ஆயுக்தா போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் அளவுக்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக தகவல் கிடைத்தது. இதனால், லோக் ஆயுக்தா போலீசார் 25 இடங்களில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில், அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பம் சார்ந்த வீடுகளுக்கு இடையிலும் அலுவலகங்கள் மற்றும் பினாமி சொத்துகளும் உள்ளன.














