இலங்கை பெளத்த பீடாதிபதிகளுடன் நிா்மலா சீதாராமன் சந்திப்பு

November 2, 2023

இலங்கையின் கண்டியில் பெளத்த பீடாதிபதிகளுடன் நிா்மலா சீதாராமன் சந்திப்பு நடத்தினார். இலங்கையில் கடந்த ஆண்டு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக இலங்கைக்கு இந்திய ஆதரவளித்து வருகிறது. கடந்த ஆண்டு கடன்கள் மற்றும் செலாவணி ஆதரவு அளிப்பதன் மூலம் நான்கு பில்லியன் டாலர் அளவில் இந்தியா இலங்கைக்கு உதவிகளை வழங்கியிருக்கிறது. இந்த சூழ்நிலையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கைக்கு மூன்று நாள் அரசு முறைப்பயணமாக நேற்று சென்றார். இலங்கையின் கண்டியில் உள்ள […]

இலங்கையின் கண்டியில் பெளத்த பீடாதிபதிகளுடன் நிா்மலா சீதாராமன் சந்திப்பு நடத்தினார்.
இலங்கையில் கடந்த ஆண்டு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக இலங்கைக்கு இந்திய ஆதரவளித்து வருகிறது. கடந்த ஆண்டு கடன்கள் மற்றும் செலாவணி ஆதரவு அளிப்பதன் மூலம் நான்கு பில்லியன் டாலர் அளவில் இந்தியா இலங்கைக்கு உதவிகளை வழங்கியிருக்கிறது. இந்த சூழ்நிலையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கைக்கு மூன்று நாள் அரசு முறைப்பயணமாக நேற்று சென்றார். இலங்கையின் கண்டியில் உள்ள அஸ்கிரிய பௌத்த மடாலயத்தின் பீடாதிபதி வரக்காகொட ஸ்ரீ ஞானரதன தேரர் மற்றும் மல்வத்து மடாலயத்தின் பிடாதிபதி குரு திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் ஆகியோரை நிர்மலா சீதாராமன் சந்தித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான வரலாற்று மற்றும் கலாச்சார ரீதியிலான தொடர்புகள் குறித்து அவர்களுடன் விவாதித்தார். அப்போது மடாலய பீடாதிபதி இந்தியாவிடம் இருந்து கிடைத்த உதவிக்கு நன்றி தெரிவித்தார்.
அதோடு இந்த பயணத்தின் போது இலங்கை மத வழிபாட்டு தளங்களில் சூரிய மின் உற்பத்திக்கான இரு தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமாக உள்ளது. இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிஙகே முன்னிலையில் இது நடைபெறவுள்ளது. இந்த திட்டத்திற்கு 82.40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. இலங்கையுடன் பௌத்த மதம் சார்ந்த உறவுகளை ஊக்குவிப்பதற்கான நிதி உதவி திட்டத்தின் கீழ் இது செயல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu