மத்திய பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள மூன்று மாதங்களில் மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான் ஆகிய மாவட்டங்களில் நவம்பர் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர். இதில் சமீபத்தில் பிரதமர் மோடி மத்திய பிரதேச மாநிலத்தில் நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்ததோடு பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் வேட்பாளர் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் உள்ள மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில் மந்திரிகளின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. முதலமைச்சர் சிவராஜ் சிங் புதிதாக மூன்று பாஜக எம்எல்ஏ விற்கு வாய்ப்புகள் வழங்கி உள்ளார். இன்று காலை கவர்னர் மங்கு பாய் படெல் மூன்று பேருக்கும் பதவி பரிமாணம் செய்து வைத்துள்ளார்.