மதுரையில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
மதுரையில் மிகவும் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகளமாக கடந்த 12ம் தேதி தொடங்கியது. இதனை தொடர்ந்து 21ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், 22 ஆம் தேதி தேரோட்டமும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து 21 ஆம் தேதி தங்கப்பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார் பின்னர் 22ஆம் தேதி எதிர்சேவை நிகழ்ச்சி, 23ஆம் தேதி அதிகாலை தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து ராமராயர் மண்டபத்தில் தீர்த்தவாரி 24ஆம் தேதி, மண்டுக முனிவருக்கு சாப விமோசனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அன்று இரவு விடிய விடிய தசாவதார கோலத்தில் கள்ளழகர் காட்சியளித்தார். இதை தொடர்ந்து இன்று பூப்பல்லக்கு நிகழ்ச்சி முடிவடைந்து கள்ளழகர் அழகர் மலையை நோக்கி புறப்பட்டு இன்று இரவு அப்பன் திருப்பதி கோவிலில் கள்ளழகர் எழுந்தருளிகிறார். பின்னர் நாளை காலையில் கள்ளழகர் தனது இருப்பிடமான அழகர் மலைக்கு சென்றடைவார். அதனுடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.