ஆவின் நிறுவனத்தில் ஏற்பட்ட முறைகேடு காரணமாக 236 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.ஆவின் நிறுவனம் கடந்த 2019-20 ஆம் ஆண்டு மேலாளர்கள், துணை மேலாளர்கள், உதவியாளர்கள், டிரைவர்கள் என 91 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. மேலும் சென்னை, தஞ்சாவூர், திருச்சி, நாமக்கல் உள்ளிட்ட பல இடங்களிலும் காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு ஏராளுமானோர் முறையாக தேர்வு கட்டணம் செலுத்தி விண்ணப்பித்ததில் பலருக்கு தேர்வு எழுத முறையான அழைப்பு விடுவிக்கப்படவில்லை.
மேலும் முறைகேடாக ஒரு பணியிடத்துக்கு 10 லட்சம் முதல் 30 லட்சம் வரை பெற்றுக்கொண்டு பணி அமர்த்தியதாகவும் ஆவின் நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டு இருந்தது. இதனை உயர் அதிகாரிகள் விசாரித்து மோசடி நடந்ததை கண்டுபிடித்தனர். இது குறித்த அறிக்கை ஆவின் நிர்வாக இயக்குனரிடம் வழங்கப்பட்டது. இதில் முறைகேடாக பணியில் சேர்க்கப்பட்ட 47 பேரின் பணி நியமத்தை ரத்து செய்ததும் இதேபோன்று பல மாவட்டங்களில் 236 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த முறை கேடுகளுக்கு உடைந்தை ஆக இருந்த ஆவின் பணியாளர்கள் 26 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டிருந்தது இந்நிலையில் மதுரை அதிரடி கிளை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக உத்தரவை பிறப்பித்துள்ளது. இதில் ஆவினில் முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்டவர்களின் பணி நீக்கம் செல்லுபடி ஆகும் என அறிவித்துள்ளது.