ஜப்பான் கடல் பகுதியில் நிலநடுக்கம்

October 6, 2023

ஜப்பான் கடல் பகுதியில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிட்டர் அளவில் 6.1 ஆகா பதிவானது. இதைத்தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.ஜப்பானை ஒட்டிய கடல் பகுதியில் நேற்று தொடர் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அதிகப்பட்சமாக, ரிட்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியிருந்தது. பூமிக்கு பத்து கிலோமீட்டர் ஆழத்தில் அந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் அருகில் உள்ள தீவுகளில் நன்றாக உணரப்பட்டன. கடலில் ஏற்பட்ட இந்த […]

ஜப்பான் கடல் பகுதியில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிட்டர் அளவில் 6.1 ஆகா பதிவானது. இதைத்தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.ஜப்பானை ஒட்டிய கடல் பகுதியில் நேற்று தொடர் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அதிகப்பட்சமாக, ரிட்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியிருந்தது. பூமிக்கு பத்து கிலோமீட்டர் ஆழத்தில் அந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் அருகில் உள்ள தீவுகளில் நன்றாக உணரப்பட்டன. கடலில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக 3.2 அடி வரையில் சுனாமி அலை வீசும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனவே ஜப்பான் வானிலை மையம் எச்சரிக்கை செய்தது. பின்னர் அந்த எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதம் மற்றும் பொருள் சேதம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இதுவரை வரவில்லை. நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் பகுதியில் ஜப்பான் நாடு அமைந்துள்ளதால் அங்கு நிலநடுக்கங்கள் ஏற்படுவது வாடிக்கையான ஒன்று.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu