சிலி நாட்டின் அர்ஜென்டினா எல்லைப் பகுதியில் இன்று காலை 5.08 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் 110 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையம் 35.28 டிகிரி தெற்கு மற்றும் 70.65 டிகிரி மேற்கு அட்சரேகைகளில் உள்ளது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்து, மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் திரண்டு நின்றனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்தவிதமான தகவலும் வெளியிடப்படவில்லை. முன்பு, கடந்த மாதம் 8-ம் தேதி, மேற்கு சிலியில் 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.