பப்புவா நியூகினியாவில் 6.6 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
பப்புவா நியூகினியாவில் வடக்கு கடற்கரையில் இன்று 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. பசிபிக் தீவின் கிழக்கு பகுதியில் உள்ள செவிக் மாகாணத்தின் தலைநகரான மெக்காக் நகரத்தின் கடற்கரையிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும் உயிர் சேதம் குறித்தோ பொருள் சேதம் குறித்தோ தகவல் இல்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. இங்கு அடிக்கடி பூகம்பங்கள் ஏற்படுகின்றன. இது ரிங் ஆப் பையர் என்ற பகுதியில் அமைந்திருக்கிறது. கடந்த ஏப்ரலில் இங்கு 7.0 என்ற ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு ஏழு பேர் கொல்லப்பட்டனர்.
அதேபோல் பாகிஸ்தானில் இன்று அதிகாலையில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவாகியுள்ளது. இஸ்லாமாபாதுக்கு அருகே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 10 கிலோமீட்டர் ஆழ த்தில் ஏற்பட்டது எனவும் நில அதிர்வுகள் நன்றாக உணரப்பட்டதாகவும் தேசிய மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சேதாரம் எதுவும் ஏற்பட்டதாக இதுவரை தெரிவிக்கப்படவில்லை.