சென்னை மற்றும் பிற இடங்களில் இருந்து மகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.ஆண்டுதோறும் மகாளய அமாவாசையை முன்னிட்டு தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து பொதுமக்கள் புண்ணிய ஸ்தலமான ராமேசுவரம் சென்று தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி வழக்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதன்படி இந்த ஆண்டு 14ஆம் தேதி மகாளய அமாவாசை வருவதால் அதிகளவில் மக்கள் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் அடிப்படையில் சென்னை, சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூர் ஆகிய இடங்களில் இருந்து 13-ஆம் தேதி மற்றும் 14ஆம் தேதி ராமேஸ்வரத்திற்கு கூடுதல் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதற்கு www.tnstc.in என்ற அதிகார பூர்வ இணையதளத்தில் மற்றும் டிஎன்எஸ்டிசி செயலியில் முன்பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
accounts