அமெரிக்க அதிபராக உள்ள டொனால்ட் டிரம்ப், பில்லியன் டாலர் அல்லது அதற்கு மேற்பட்ட முதலீடுகளை மேற்கொள்ளும் முதலீட்டாளர்களுக்கு விரைவில் அனைத்து சுற்றுச்சூழல் ஒப்புதல்களையும் அனுமதிப்பதாக அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு டிரம்ப் தனது “டிரம்ப் ஆன் ட்ரூத்” எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார். இது பல நிறுவனங்களின் வரவேற்பை பெற்றாலும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கடும் எதிர்ப்பைக் குவித்துள்ளது. எவர்கிரீன் ஆக்ஷனின் நிர்வாக இயக்குனர் லீனா மொஃபிட், டிரம்பின் இந்த முயற்சியை விமர்சித்து, "பெரிய ஏலதாரரிடம் அமெரிக்காவை விற்றதற்கான உதாரணமாக இது இருக்கிறது" என்று கூறினார்.