மலேசியாவில் கடற்படை ஒத்திகையின் போது நடுவானில் இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் பலியாகினர்.
மலேசியாவில் லுமூட் நகரில் உள்ள கடற்படை தளத்தில் இன்று கடற்படை அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. அப்போது நடுவானில் இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் பலியாகினர். ஹெலிகாப்டர் ஒன்று மற்றொரு ஹெலிகாப்டரின் காற்றாடி மீது மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டது என்று கூறப்படுகிறது. காலை 9:00 மணி அளவில் இந்த விபத்து ஏற்பட்டது என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. HOM M503-3 ரக ஹெலிகாப்டர் ஓடு பாதையில் கீழே விழுந்ததில் ஏழு பேர் பலியாகினர். Fennec M502-6 ரக ஹெலிகாப்டர் நீச்சள் குளத்தில் விழுந்ததில் அதிலிருந்த மூன்று பேர் பலியாகினர். இவர்கள் அனைவரும் கடற்படை வீரர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுடைய உடல்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.