மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ படைகள் வரும் மே மாதத்துக்குள் வெளியேறும் என அந்நாட்டின் அதிபர் முகமது மொய்சோ தெரிவித்துள்ளார்
மாலத்தீவு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அதிபர் முகமது மொய்சோ, இந்திய படைகள் நிச்சயமாக வெளியேறும் என உறுதி அளித்துள்ளார். அவர் சீனா ஆதரவாளராக அறியப்படுகிறார். எனவே, இந்திய ராணுவத்தை வெளியேற்றுவதில் முனைப்பு காட்டி வருகிறார். அதன்படி, மே மாதத்திற்குள் ராணுவம் முழுமையாக வெளியேறும் என உறுதி அளித்துள்ளார். மாலத்தீவில் 3 விமான தளங்களில் இந்திய துருப்புகள் உள்ளன. அதில் ஒரு விமான தளத்தில் உள்ள துருப்புகள் மார்ச் 10 ஆம் தேதியும், மற்ற 2 விமான தளங்களில் உள்ள துருப்புகள் மே 10 ஆம் தேதிக்குள்ளும் வெளியேறுவர் என மொய்சோ தெரிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சியினர் தரப்பில் மிகுந்த எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டு வருகிறது.