நகராட்சியாக மாறும் மாமல்லபுரம் பேரூராட்சி

November 23, 2023

மாமல்லபுரம் பேரூராட்சியை நகராட்சியாக மாற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாமல்லபுரம், வெண்புருஷம், பூஞ்சேரி, தேவநேரி, பவழக்காரன் சத்திரம் ஆகிய பகுதிகளில் 20000 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இது 15 வார்டுகளை கொண்ட சிறப்பு நிலை பேரூராட்சியாக செயல்பட்டு வருகிறது. மேலும் சர்வதேச சுற்றுலா பகுதியில் முக்கியத்துவமாக செயல்பட்டு வருகிறது. இதில் தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மாமல்லபுரத்தை நகராட்சியாக மாற்ற முடிவு எடுத்து அதற்கான பணிகளை செய்து வந்தது. இந்நிலையில் பேரூராட்சியை நகராட்சியாக […]

மாமல்லபுரம் பேரூராட்சியை நகராட்சியாக மாற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாமல்லபுரம், வெண்புருஷம், பூஞ்சேரி, தேவநேரி, பவழக்காரன் சத்திரம் ஆகிய பகுதிகளில் 20000 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இது 15 வார்டுகளை கொண்ட சிறப்பு நிலை பேரூராட்சியாக செயல்பட்டு வருகிறது. மேலும் சர்வதேச சுற்றுலா பகுதியில் முக்கியத்துவமாக செயல்பட்டு வருகிறது. இதில் தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மாமல்லபுரத்தை நகராட்சியாக மாற்ற முடிவு எடுத்து அதற்கான பணிகளை செய்து வந்தது. இந்நிலையில் பேரூராட்சியை நகராட்சியாக மாற்ற பேரூராட்சி ஒப்புதல் தேவைப்படும். இதனால் அவசர கூட்டம் நேற்று மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தலைவர்கள் துணைத் தலைவர்கள் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒப்புதல் அளித்தனர்.மாமல்லபுரம் பேரூராட்சி நகராட்சியாக மாறுவதால் பொது சுகாரம், திடக்கழிவு மேலாண்மை, துப்புரவு, கழிவுநீர் அகற்றல், கழிப்பறை வசதி குடிநீர் வழங்கல் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் மாமல்லபுரம் பகுதி மக்களுக்கு கிடைக்கும் என நகராட்சி நிர்வாக துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu